அன்பே என்னை ஆளும் ஜீவ,நதி நீ
ஆராதனையில் அருளும் தேவி நீ
இளைய நிலா புருவ விழியில்
இருள் கால வழி காட்டி நீ
ஈர்ப்புடை பூமி என நியூற்றன் கண்டான்
அதன் ஆக்க சக்தி ஆனவள் நீ
உன் பெயர் சொல்லும் எப்போதும் என் உதடுகள்
ஊனம் அல்ல மௌனத்தில் உன் உதடுகள்
என்னவளே யாரிடம் இல்லை ஊனம்
ஏளனமே அவரவர் ஊனம்
ஐயம் கொள்வாரவர் அறியாமை தவிர்த்து ஓர் நாள்
ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல இருவர் மனசும் ஒன்றே
ஓடும் நதியிலும் சுனாமி அலையிலும்
ஔடதம் ஏறி வாழ்வெனும் படகு விட்டோம்
கொரோனா அலையில் கொல்லா அன்பில்
குவலையம் கண்டெழுவோம்
அன்பு மொழி பேசும் ஆருயிர் கிளியே
உன் வண்ண விழிகளிடம் தானே
ஆயுத எழுத்துக்களை கற்றேன்
தாய் மொழியும் வாய் மொழியும்
வார்த்து தருபவளே
என்னை ஆளும் ஜீவநதி நீயே நீயே
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...