mardi 7 avril 2020

பொன் வான விடியல் எப்போ ...?

செவ்வானம் சிவந் ஒழிய விளைந்த நெல் கதிர் அறுத்து
பொன்வான விடியலிலே தன்மானம் தழைத்திருந்தோமே

உள்ளத்திலே கள்ளம் இல்லை உலகிடத்தில் பொய்யும் இல்லை
லெட்சோப உயிர் மாண்டதிலே ரெத்த வடு இன்னும் ஆறவில்லே
உற்றவரும் இல்லே பெற்ற பிள்ள உயிரும் இல்லே
அள்ளிப்போன சுனாமியிலே எஞ்சியோரும் மீதம் இல்லே
எண்ணில்லாத் துயரிலே துவன்டு மனம் வீழ்ந்திருக்க
தொட்டாலே தொற்றுதடா கொரோனா
விழி நீர் வீழ்ந் ஓடியும், மீண்டெழுவார் யாரும் இல்லே

வீட்டுச் சிறை கூட்டுக்குள்ளே ஊரடங்கு உலகத்திலே
நாளுக்கு நாள் வீழும் உடல்களை எண்ணி எண்ணி
உலகச் செய்தி சுழலுதடா உயிர் வதையில்
அன்றழுதோம் தமிழீழம் மீழ
இன்றழுகிறோம் உலகே மீழ
உற்றவரை குழி மூடி மாயை விட்டகன்றும்
சுழலும் பூமிழில் சாமி உன்னை காணலையே
என்று மாறுமோ இக்,கோலம்
கொரோனா கொன்றுடத்தானோ இக்காலம்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...