வண்ண வண்ண பாத்தி கட்டி
வண்ண வண்ண பாத்தி கட்டி
எண்ணங்களை விதை தூவி
சொப்பனங்கள்
இறைத்து வைத்தேன்
வாழ்க்கைச் செடி மரமாகி
நிழல் தூங்கவில்லை அம்மா
உதிர்கிறேன் சருகாய்
பாவி மனம் யார் அறிவார்
மொட்டவிழ்ந்த பூவிடத்தில்
தேனீக்களும் சொந்தம் இல்லை
தென்றல் தீண்டா வனக்காட்டில்
திங்கள் எல்லாம் தேயுதம்மா
பூவெடுத்து மாலை கட்டி
சூடித்தர யாரும் இல்லை
சீதனச் சந்தை மந்தை வெளியில்
ஏழைக்கேது வாழ்விங்கே
பூத்த கொடி பூச் சொரிய
மன்னவன் வருவானோ
நாத்து வைத்த நிலத்திலே
நாண அந்தி மூழ்குவதேன்
வா வா மேகமே
நீராட காத்திருக்கேன்
பாவலர் வல்வை சுயேன்
வண்ண வண்ண பாத்தி கட்டி
எண்ணங்களை விதை தூவி
சொப்பனங்கள்
இறைத்து வைத்தேன்
வாழ்க்கைச் செடி மரமாகி
நிழல் தூங்கவில்லை அம்மா
உதிர்கிறேன் சருகாய்
பாவி மனம் யார் அறிவார்
மொட்டவிழ்ந்த பூவிடத்தில்
தேனீக்களும் சொந்தம் இல்லை
தென்றல் தீண்டா வனக்காட்டில்
திங்கள் எல்லாம் தேயுதம்மா
பூவெடுத்து மாலை கட்டி
சூடித்தர யாரும் இல்லை
சீதனச் சந்தை மந்தை வெளியில்
ஏழைக்கேது வாழ்விங்கே
பூத்த கொடி பூச் சொரிய
மன்னவன் வருவானோ
நாத்து வைத்த நிலத்திலே
நாண அந்தி மூழ்குவதேன்
வா வா மேகமே
நீராட காத்திருக்கேன்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...