மாயை சூடும் வர்ண வாழ்வே
அறிவேன் உன்னை, அஞ்சேன்
அன்பு நிலையும் அறுவடை சாவும்
கண்கள் கனன்று சொரிய
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை என் செய்வோம்
ஆசைத் தூறலில் அழிந்தே வீழும் கூடுது
கட்டை எரிந்திட கல்லறை சிரித்திட
புழுவாகி பூடாகி புழுத்தலில்
உருகும் ஜீவனுக்கு
இகபர வாழ்வு இனிப்பா கசப்பா
தேடுகிறேன்,
எழுதிய புத்தகம் எங்கே
எட்டவில்லை!
தத்துவ ஞானம் தாளா நின்று
மீளா பொய்கை விட்டகல
விடை கொடு விரும்புகிறேன்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...