dimanche 1 mars 2020

என்னை உனக்கு தெரிகிறதா !!!


 என்னை உனக்குத் தெரிகிறதா - நான்
அவனில்லை என்று சொல்லமாட்டேன்
ஐந்தில் என்னோடு
ஆரம்பப் பள்ளி வந்தாய்
அன்று நீ போட்ட சட்டை ஆரஞ்சு நிறம்

பத்தில் பல்லாங்குளி விளையாட
வா என்பாய்
அந் நாளில் எனது ஆர்வம்
தோளர்களோடு
கிட்டிப்புல்லு விளையாடுவதும்
நாற் கல்லு பந்திலும்தானே

பதினைந்திற்கும் இருபதுக்கும் இடையில்
இடியோடு முழக்கங்கள் இருவருக்கும் நடுவில்
இருவருமே,
எதை கண்டும் அஞ்சுவதில்லை

உனது அண்ணனும் அப்பாவும்
என்னை பார்த்து முறைப்பார்கள்
எதற்கென்று தெரிவதில்லை
அவர்களிடம் உதை வாங்கும் போதுதான்
தெரிந்துகொண்டேன்
உன்மேல் நான்கொண்டது காதல் என்று

உன் இருப்பிடத்தில் பல இடமாற்றங்கள்
சித்தி வீடென்றும் அத்தை வீடென்றும்
இரகசிய கூண்டுக் கிளியாய் நீ

நீ இருக்குமிடம் தேடினேன் தேடினேன்
என் கால்கள் ஓயவும் இல்லை
தேடினேன் தேடினேன்
என் தேடல் தோல்வி காணவும் இல்லை

வென்றுடுவேன் இனி எமது வாழ்வை
இன்று நான் உயர்ந்த உழைப்பாளி
உன் வீடு வந்தே
உன்னை பெண் கேட்பேன்
இனி இல்லை என்று சொல்வாரா
உன் அண்ணனும் அப்பாவும்

நாம் யார்க்கும் குடி அல்லோம்
இல்லறம் கொள்வோம்
இயமனுக்கும் அஞ்சோம்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...