இறைவனுக்கும் மனிதனுக்கும்
மீண்டும் ஓர் யுத்தம் !
கற்பூர தீபத்தில்
கடவிளின் தூதன் எங்கிறான் ஒருவன் !
சொப்பனமோ, சொற் பதங்களாலே
கடவிள் இல்லை எங்கிறான்
இன்னொருவன் !
வல்லரசும் நல்லரசா கேழ்விகள் மீதம்
பொஷ்பரசும் வைரஸ்சும்
கொல்லுதே இவ்விடர் காலம்
இறைவன் படைப்பா கொரோனா
இதுவரை கண்டதில்லை உலகு
கொல்லாமல் கொல்லும் கொரோனாவை
இல்லா தழிப்பவன் எவனோ
அவனே இன்றெமக்கு
நேர் காணும் இறைவன்
சித்திரகுப்தனும் ஏட்டை துலைத்தான்
இயமனும் இரங்கி கயிற்றை துலைத்தான்
அகில உலகே கோரோனாவின் கொலை வெறியில்
இன்றுருப்போர் இங்கே நாளை இருப்பாரோ
யாருக்கும் தெரியவில்லை
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...