mardi 10 mars 2020

என்ன செய்யப் போகிறாள் !!!

 வான வில்லே வர்ண யாலமே
ஏழு நிறங்களும் உனக்குள்ளே
அதை தொட்டெடுத்தே
ஏதோ வரைந்தேன்
ஓவியன் என்றார்

பாடும் குயில்களே பண்ணிசை புள்ளினங்களே
உங்களின் குரல் எடுத்தே ஏழு சுரம் இசைத்தேன்
பாவலன் என்றார்

ஏய் வானமே....,
வெறுமைக்குள் நீலம் தருகிறாய்
உன் ஞானம்
ஆழ் கடல் நீரை குடித்து
உப்பின்றி மழையாய் தருகிறாய்
விஞ்ஞானமா அஞ்ஞானமா
விண்ணேறிய விஞ்ஞானம் வீழ்ந்து கிடக்கிறது
உன் சூச்சுமம் அறிய காலடியில்

உன் துகில் வில்லெடுத்தே பருவம் பூட்டி
எய்துவிட்டாள் ஒருத்தி வீழ்ந்துவிட்டேன்
ஆறறிவும் ஏழாகலாம்
எட்டா வானமும் கிட்டலாம்
இவள் உள்ளத்தில் இருப்பது
உப்பா இனிப்பா..., சொல்
என்ன செய்யப் போகிறாள் என்னை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...