samedi 8 février 2020

மின்னல் கொடி !!!


ஏதோ ஒரு மின்னல் - என்
விழியை பறித்த தென்ன
கட்டிக் கொண்டதோ
என்னை கனலில் இட்டதோ

பட்டுச் சாய்கிறேன் பூவே
விட்டுப் போகிறாய் என்னை
என்ன மாயமோ
என் நிழலும் தேயுதே

மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடி
அடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு

தீண்டாத விளக்கில்லை
திரிக்கூட்டில் நெய்யிட்டு
விடி வானை கை ஏந்தி
மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னை தொட்டவளே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...