lundi 28 mai 2018

நிறங்கள் இன்னும் தீரவில்லை !!!


 என்னை மீட்டும் கலை வாணியே
உன்னை தீட்டும் ஓவியன் நானே
எந்தன் நெஞ்சில் நீ ஏழு ராகம்

உலகச் சிற்பம் வெல்ல வல்ல
சித்திரம் கண்டு
கொஞ்சும் தென்றல் அஞ்சுதடி
தொட்டணைத்து தீட்டுகிறேன்
நிறங்கள் இன்னும் தீரவில்லை

ராஜ ராஜ சோழனின் வம்சம் நாமே
இன்ப வானில் இறகு விரித்து
தஞ்சை கோபுர கலசம் செய்வோம்
உலக அதிசயம் உரு மாறும் போதில்
உன்னையும் என்னையும் எழுதும் காவியம்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...