mercredi 3 août 2016

ஆராதனை முடியவில்லை !!!!!



நித்திய அபிசேகம் நனைந்தேன் ஆராதனை முடியவில்லை
முப்பாட்டனின் கட்டில் முன் கோபம் உற்று மூச்செறிந்தும்
பூகம்பக் கோளங்கள், பூவையின் புனல் விழிக்குள் !!
அன்று பாஞ்சாலி இன்று சரவணன் மீனாட்சி
ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் பாரதப் பஞ்சாங்கம்
கால் மேலாய் வாசிக்கப்படுகிறது 
ராகு காலத்திலும் !!
மார்கழித் துளியின் உயிரும் உருகி உயிர் காய
ஆதி மனிதன் கண்ட சிக்கி முக்கிக் கல்
சித்திர விழிக்குள்ளே சிரஞ்சீவியாய் எரிகிறது !!!!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...