jeudi 11 août 2016

நீ வருவாயென !!!



வெள்ளை காகிதத்தில் உன் பெயர் எழுதினேன் ரோஜா
காகிதமும் பேனாவும் முத்தம் கொடுத்துவிட்டு
திரும்பிப் பார்த்தன என்னை
நாணம் உற்று நலிந்தேன் மெல்ல !
இவ்வேளை எங்கிருந்தோ வந்த இரு தேனீக்கள்
பக்கம் பக்கமாய் வெள்ளைக் காகிதங்கள் இருந்தும்
உன் பெயர் மேல் அமர்ந்தே 
ஆசை முத்தம் இடுகின்றன !     
என்னவளே நீ கருப்பஞ் சாற்று இனிப்பே என
சோலை வனமும் ரீங்காரம் பாடுதடி
காகிதமும் பேனாவுமாய் தேனீக்களோடும்
முத்தப் பரிமாற்றம் நித்தம் செய்திட
அந்த மண நாள் வரவுக்காய் காத்திருக்கிறேன்
நீ வருவாயென....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...