jeudi 31 décembre 2015

பருவம் மாறா வரிசம் பதினாறு ...

பருவம் மாறா வரிசம் பதினாறு வா என்றே என்னை கொஞ்சும் வேளை
முத்தம் இட்ட நாள்களை வெட்டிவிட்டு போகிறாள்
முன்னூற்றி அறுபத்திஐந்து நாள்கள் என்னோடு வாழ்ந்த முன் கோபக்காறி
ஆண்ட் டாண்டாய் அழகு தேவதை என்னை அரவணைக்கிறாள்
கொஞ்சிப் பேசுகிறேன் கொஞ்சம் அஞ்சியே வாழ்கிறேன்
சிரிக்க வைக்கிறாள் என்னை அழவும் வைக்கிறாள்
அழுத விழிக்குள் கொதிக்கும் செவ்வானம் கண்டால்
அமுத மழையால் என்னை சில்லெனவும் தழுவுகிறாள்
வயசு பதினாறு என்றோ என்னை கடந்து போனதுன்டு
வரிசம் பதினாறு வந்தென்னை வளைக் கரங்களால் அணைக்கிறது
பவளப் பாறை மீன்கள் போலே பாடி ஆடுகிறேன்
பச்சை வெல்லம்  தொட்டுக் கொஞ்சம் சுவைத்து வாழுகிறேன்
இளமை நாள்களின் இனிய ராகம் இதயம் தொடுகிறதே
வரிசம் பதினாறே உன்னோடு நான் ஆடுகிறேன் ஆனந்த ஊஞ்சல்....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...