jeudi 10 décembre 2015

ஓர விழிப் பார்வையிலே ஓவியம் சிரிக்கிறது ....

உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
இவ்வுலகின் நாயகன் நாயகி நீயும் தான்
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்...
வாழ் நாள் இருப்பில் வாசனை உண்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்...
வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்தே
ஓர விழிப் பார்வையில் ஓவியம் சிரிக்கிறது
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்
உன்னைச்  சுற்றி விரிக்கப் பட்டுருக்கிறது
சிலந்தி வலையாய் சித்திரக் கோடுகள்
காணும் வரைதான் கனவுலகம் நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும் கடல் நடுவே காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு தேவை இல்லை
சாமிக்கும் சொல்லிவிடு அனைத்தும் இங்கே நிர்வாணங்களே...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...