இனிமை நினைவிலும் இளமை ஒளியிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே
நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்கப் பூவிலும் மறு பக்கத் தலையிலும்
வாழ்க்கை நாணயமா?
உன் பூமுகச் சிரிப்பும் உள மலர் இதழும்
கருகும் திரியில் உருகும் நாடகமா?
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் சுமந்தால்
மறு ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் என தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்!
Kavignar
Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...