தமிழுக்கும் தமிழக்கும் சுதந்திரம் இல்லாத் தேசம்
தமிழா தமிழால் தேசிய கீதம் பாடித்தான் பயனுண்டோ
பாடாது போனாலும் வாராது வருமோ சுதந்திரம்
ஆன்றோர் என்போரும் மாண்டோரே ஈனர் காலில்
தாயகம் தனில் தலைநிமிர்ந்தே தலைமுறை வாழணும்
சுய உரிமை சுரந்தோடி சூழ் பகை நீங்கணும்
இன்பத் தமிழ் நாட்டிலே இனிதோங்கி வாழ்ந்து
சங்கத் தமிழால் பாடுவோம் தேசிய கீதம்
நீதி நிலைத்து நிலையுறு வாழ்வு நிலைத்திட்டால்
பாடு தமிழா பாடு பண்ணொடு தமிழில்
பரவசம் பொங்கி பாடும் குயிலும் உன்னோடு
சுதந்திர வாழுவின், தேசிய கீதம்!
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...