vendredi 7 février 2020

அனல் திரை !!!

கனா காண்டேன் காலங்கள் பதினாறு 
பனித் திரை விலக்கி – அனல்
திரை சாய்த்ததே பதினெட்டு

உன்னைத் தொட்ட காற்று
என்னைத் தொட்டுப் போக
நதியான உள்ளம்
சங்கமம் தேடுதே

உருக்கினாய் உருகிதே இரும்பு
சுட்டாலும் வெண்மையே சங்கு
விழியும் மொழியும் சந்தித்தவேளை
சிந்திக்கவே இல்லை
புலர்ந்தன காந்தக் கூற்று

இரும்பும் உருகி சங்காய் மிளிர்கிறேன்
விழி அம்பெய்து கொய்தாய் நீயே
உடற் பசி இலாதார் எவரில்லை
இதை இல்லை என்பார் சிலருண்டு
அவர் ஜீவன் இல்லை
வாழும் காலம் யாவும் சேருமே
வா வா அன்பே மீன்டும் பதினாறு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...