mercredi 25 avril 2018

சிகரம் ஏறும் சித்தெறும்பு நான் !!!


உன் விழிகளிரண்டும் என்னை ஏதேதோ செய்யுதடி - விண்
மீன்களும் உன்னெழில் கண்டே நிலை மாறி உதிருதடி

மூடாதே விழிகளை முகிலுக்கும் ஆணையிட்டேன்
அதற்குள்ளேதான் என்னை துலைத்தேன்
இடம் தந்த காகிதம் 
சுவையுற்று சொன்ன செய்தியில்
தொட்டெழுதிய பேனா தித்திப்புற்றிட
தேனீக்களுக்கும் வேர்த்தது மூக்கில்
எச்சம் ஏதாச்சும் எச்சி முத்தத்தில்
எடுத்துக் கொள்ளவே சண்டை இடுகின்றன    

படைத்தவன் பிரம்மன் அல்ல இங்கே
சுவை அறிந்தவனே பிரம்மனாகிறான்
சிகரம் ஏறும் சித்தெறும்பு நான்
இன்னும் அதன் அடிவாரத்திலேயே நிற்கிறேன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...