mardi 17 avril 2018

ஈரடியும் ஓரடியாய்.....


சுட்டெரிக்கும் சூரியனை உற்ற நிலாவே
அவன் சுடரணைத்தே பருவம் பூத்தாய்
வண்ண நிலாவே...

ஓடோடி வந்த அலை உன் கால் நனைக்க
உனை கொஞ்சும் கொலுசுக் கேனடி கோபம்
இதயம் தொட்டு இரு விழி அழைத்து
ஈரடியும் ஓரடியாய் இணை கூட்டி போகிறாய்
ஆசை கொண்ட மணல் நண்டும் அன்பு முத்தம் தந்து
அழகுக் கோலம் போடுதடி ஆங்காங்கே உன் அடிச்சுவட்டில்

மலர் தூவி சாய்கிறேன் மலர் உன்னை சேர்கிறேன்
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு....
Kavignar Valvai Suyen
செல்பிக்குள்ளே தேட வைத்தாய் தேனே தேனே
நீ இருந்தால் என்னோடு நிலா காலம்தான்
நீ இன்றி போனால் இருள் காலம்தான்
சங்கமம் நின்றாள சதி பதியாவோமே
சந்தோசம் வென்றாள சலனங்கள் கொல்வோமே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...