dimanche 28 décembre 2014

வாழ்க்கை புத்தகம் எங்கே....


வாழ்க்கை புத்தகம் எங்கே....
 
வாழ்க்கை ஒரு நிலைக் கண்ணாடி 
வர்ண யாலங்களால்
முலாம் பூசப்பட்டுருக்கிறது
முற்கள் உண்டு
முகம் அறியா கற்கள் உண்டு
மாற்றார் வாழ்வில் மாறுமுகம்
எவர்க்கும் உன்டு
துணையென வந்தோரின்
அன்பும் தூரோகமும்
துளிர்க்கும் மரமே வாழ்க்கை...
அன்பு நிலையிலும் அறுபடைச் சாவிலும்
எழுவதும் வீழ்வதும் எண்ணில் இல்லை
கட்டை எரிகிறது கல்லறைகள் சிரிக்கிறது
மண்ணுக்குள் என்னொரு ஜீவனாய்
புழுக்கள் புறமுதுகிட்டு செல்கிறது
வாழ்க்கை இனிப்பா.. புளிப்பா..
எழுதிய புத்தகம் எங்கே.? தேடுகிறேன்.!
என் கையில் இன்னும் எட்டவில்லை...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...