மலர் தூவி சாய்கிறேன் மலரே நீ என்னில் சாய்கிறாய்
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும்
தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு
பாவலர் வல்வை சுயேன்