lundi 25 juin 2018

நர்த்தனையாள் அல்லி !!!


அந்தி மஞ்சம் அழகு நீராடும் அல்லியே
ஆனந்த நர்த்தனை கொடியே
நீ குழிக்க
நீர் வளைகள் உனை அணைக்க
ஆனந்த சுரம் எனக்குள் மீட்டுகிறாய்

அன்றலர்ந்த அழகே உனைத் தொட்ட ஆதவன்
அந்தப்புறம் தனில் உனைவிட்டுச் சென்றான் எனில்
காரிருள் சூழ்ந்தும் உன் பருவம் பொய்த்ததில்லை
மலர்ந்தும் மலரிதழ் மூடி மௌனிக்கின்றாய்
யாரும் காணார் உன் வதனம்

கொடி இடை நீராட அலை ஒலி கொலுசொலிக்க
சந்திரன் வந்தாலென்ன இந்திரன் அழைத்தாலென்ன
ஆதவன் இல்லையேல்
இமைக் காவலுக்குள் நீ ஏற்பது விரதம்
விடியலுக்கே எழுதுகிறாய் விழி மடல் கடிதம்
விரகதாபம் இல்லையடி அதோ வருகிறான் ஆதவன்

பாவலர் வல்வை சுயேன்

கல்யாண வைபோகம் 60

dimanche 17 juin 2018

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!


கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய்
புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ

இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய
அமிலம் வீசுகின்றீர் அன்றலர்ந்த தாமரையில்
மலர் கொய்யும் கொடியோரே மனம் ஏது கல்லோ
இதழ்கள் உதிர்ந்திங்கு உலர்கின்றதே அல்லிகள்

கற்றிட மிளிரும் கல்வி நிற்க கற்பம் உறுதல் மேலோ
புனைதல் ஓர் பாடமோ பூவிடத்தில் மோகமோ
மானமே பெரிதென முகம் காட்ட மறுக்கும் மலர்களும் 
மனம் உதிர்ந்து மரணத்தை ஆள்கின்ற மொட்டுக்களும்
விதியென வீழ்தல் முறையோ இது தகுமோ

உம் தாயிடத்தில் பாரென்றால் தவறென்பீர்
வேறென் சொல்வேன் வேகும் மனசுக்கு
வேறு சொல் தொரியவில்லை
நீதி சினம் காக்க பாதி அறுத்திடுங்கள் போதும்
அச்சமொடு எஞ்சி வாழ்வார் குருகுலத்தில் ஆசான்கள்
மேன்மையுறு மேதினியில் மெய் ஒளிரும் கல்விச்சாலை

பாவலர் வல்வை சுயேன்

mercredi 13 juin 2018

சரணம் ஆனேன் பல்லவி நீயே...


என்னன்பே என்னுயிரே என் செய்தேன் உன்னை
என்னை வென்றாய் எழிற் தமிழாலே
சரணம் ஆனேன் பல்லவி நீயே

வண்ணம் தூவிய வான வில்லைத்தொலைத்தேன்
வைர நட்சத்திரங்களின் உறவைத்தொலைத்தேன்
என்னை உலுக்கிப்போகும் அழகே
எத்தனை நட்சத்திரம் எண்ணில் இல்லை
ஒன்றாய் சேர்த்து சிரு கல்லாக்கி
உன் ஒற்றை கல் மூக்குத்தியில்
ஒளித்தாய் எப்படி

தங்கம் தானே உன் அங்கம்
அள்ளி பருகிதே ஆனந்தக் குளம்
ஆனந்த உலகென நீ இருக்க
ஏழுலகும் தேடி போவேனோ எழிலே 
அன்பே அன்பே கருக்கல் கரையுதடி

செம்மாங்கனியும் செம்பரித்தி இலையும்
எழுதும் ஏடக ஆலிங்க படையலும்
மாயம் அறியேன் காயம் ஆனேன்
அள்ளிப் பருகினேன் அதிரசம் ஆருயிரே

பாவலர் வல்வை சுயேன்

lundi 11 juin 2018

கட்டில்கள் அழுகின்றன !!!


மின்னும் சிற்றாடையில் வண்ணம் தூவும் வரிவளையே
உத்தமரும் உன்னருகே  ராத்திரி வித்தகரே ஊருக்குள்ளே 
வளர் நிலா விளக்கேற்றி 
வஞ்சி நீ வண்ணம் மின்னி
நாணத் திரை நகல் அகற்றி
கூந்தல் திரை போர்த்துகிறாய்
செம் பவள பெட்டி தனில் தேடும் சுகம் காண்கயிலே
கௌரவம் பொய்த்ததடி கரு வண்டுகள் உன் காலடியில்
சீர் கொண்டு வருகிறார் சீதணம் கேட்கும் கோமான்களும்
செம்மஞ்சள் மின் மினியே விட்டில்கள் வீழ்ந்திட
கட்டில்கள் அழுகின்றன...

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...