mardi 16 décembre 2014

வினையென நினைந்து விரிசல் வீழாதீர்..


வினையென நினைந்து விரிசல் வீழாதீர்..
 
உறவெனும் சங்கிலி
உள்ளம் செதுக்கிய
பொன் என்பார்
விரிசல் கோட்டில்
அன்பிழை அறுத்து
தொங்கு நிலை பட்டமாய்
தொலைகின்றன முகங்கள்
அன்பெனும் சங்கிலியும் அணையா ஒளியுமே
பொன் விளையும் உறவின் விதை நிலமாகும்
வினையென நினைந்து விரிசல் வீழ்ந்திட
பகையெனும் வாளை உருவாதீர்கள்
உறையில் இருக்கும்வரைதான்
அன்பும் அறநெறியும் இன்னுயிர் தோழனாகும்.
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...