உயிர்த்த ஞாயிறு மரித்ததே இறைவா
மரண ஓலம் தேவன் கோவிலிலே
மிதவாத வன்ம மதவாதம் ஏனடா
இனிய வாழ்விற்கு மறை நூல் பொய்யோடா
ஆழ்ந்த இரங்கலும் அனுதாப அலையும்
மீழ் தருமா மாண்டோர் உயிர்தனை
அரிதென பெற்ற மானிட வாழ்வினை
முள் முடி ஏற்றி சிலுவையில் அறைந்தீரே
உம் மதம் எம் மதம் என
ஏதாச்சும் சொன்னாரா பூவும் பிஞ்சும்
எம்மதமும் சம்மதமே ஆன்றோர் அனைவர்க்கும்
அறியாயோ நரனே ஆணவம் அநீதி காடே
மரண ஓலம் தேவன் கோவிலிலே
மிதவாத வன்ம மதவாதம் ஏனடா
இனிய வாழ்விற்கு மறை நூல் பொய்யோடா
ஆழ்ந்த இரங்கலும் அனுதாப அலையும்
மீழ் தருமா மாண்டோர் உயிர்தனை
அரிதென பெற்ற மானிட வாழ்வினை
முள் முடி ஏற்றி சிலுவையில் அறைந்தீரே
உம் மதம் எம் மதம் என
ஏதாச்சும் சொன்னாரா பூவும் பிஞ்சும்
எம்மதமும் சம்மதமே ஆன்றோர் அனைவர்க்கும்
அறியாயோ நரனே ஆணவம் அநீதி காடே
பாவலர் வல்வை சுயேன்
21.04.2019