mercredi 31 décembre 2014
mardi 30 décembre 2014
lundi 29 décembre 2014
dimanche 28 décembre 2014
வாழ்க்கை புத்தகம் எங்கே....
வாழ்க்கை புத்தகம் எங்கே....
வாழ்க்கை ஒரு நிலைக் கண்ணாடி
வர்ண யாலங்களால்
முலாம் பூசப்பட்டுருக்கிறது
முற்கள் உண்டு
முகம் அறியா கற்கள் உண்டு
மாற்றார் வாழ்வில் மாறுமுகம்
எவர்க்கும் உன்டு
துணையென வந்தோரின்
அன்பும் தூரோகமும்
துளிர்க்கும் மரமே வாழ்க்கை...
அன்பு நிலையிலும் அறுபடைச் சாவிலும்
எழுவதும் வீழ்வதும் எண்ணில் இல்லை
கட்டை எரிகிறது கல்லறைகள் சிரிக்கிறது
மண்ணுக்குள் என்னொரு ஜீவனாய்
புழுக்கள் புறமுதுகிட்டு செல்கிறது
வாழ்க்கை இனிப்பா.. புளிப்பா..
எழுதிய புத்தகம் எங்கே.? தேடுகிறேன்.!
என் கையில் இன்னும் எட்டவில்லை...
Kavignar Valvai Suyen
samedi 27 décembre 2014
vendredi 26 décembre 2014
ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..
ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..
பட்டம் பறக்கிது பட்டம் பறக்கிது இது எங்க ஊருங்க
வாடைக் காத்தில் விண்ணில் விதைத்த வண்ணத்
தோட்டமுங்க நீங்க வந்து பாருங்க
வல்வைச் சந்தியில் கொக்குச் சாடுது
ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது
எல்லோர் கரங்களும் நூலே பிடிக்கிது
உதயசூரியன் கடற்கரை மணலில்
கப்பல் பட்டம் ஏறுது ஏறுது
குச்ச ஒழுங்கையில் சாடும் பிராந்துகள்
சண்டையும் போடுது போடுது போடுது
ஊரிக்காட்டு மைதான வெளியில்
நாக பாம்பு படம் எடுத்தாடுது
இது குட்டி மச்சான் ஏத்திய
பாம்புப் பட்டம் ஊரையே கூட்டுது
நெடியகாட்டு கணபதி லைற்றின்
மின்னொளி பட்டம் வெண்ணிலா கூட்டுது
வல்லவர் செய்யும் சாகச வரிசையில்
விண்ணில் இரு நிலா எங்க ஊரிலுங்க
ஊறணி கடற்கரை தீத்தவெளியில்
கதறுது கதறுது கட்டுக் கொடியுங்க
நான்கு விசைகளில் நாதம் இசைத்து
தலையை ஆட்டுதுங்க
அப்பண்ணா வாட்டிய விண்ணின் சத்தம்
ஊரை அடக்கிதுங்க
பெடியங்கள் எல்லாம் தடியங்கள்தானுங்க
பட்டம் ஏத்தி பறக்கிறானுங்க பாருங்க
மிதிவண்டி மேலே ஓடலிச் சுப்பு
கோப்பிறேசன் தான்டி வாறேனுங்க
சுதி ஏத்தி பாட எது இல்லை இங்கே
இன்னைக்கு பாட்டு இதுதானுங்க...
Kavignar Valvai Suyen
jeudi 25 décembre 2014
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...