கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன்
நீதான்
நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டுவிறகென்றாய் கலங்கினேன் ..!
இருந்தும் ,
இன்னும் எனக்குயிர் இருப்பதை கண்டு
உருகினேன் உன்னை எண்ணி .. ..
வண்டி கட்டி வரிசையாய் அடுக்கி வைத்த என்னில்
பிணமாய் உன்னை வளர்த்தி எரி மூட்டிவிட்டார் .. ..
சுடு காட்டில் நீறாகி
இன்றுதான் இறக்கின்றேன் நானும்
உயிர் தந்தவனே உன்னை வெட்டியது யார் .. .. ..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...