mercredi 9 juillet 2014

கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து ..


கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான்
நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு
விறகென்றாய் கலங்கினேன் ..!
இருந்தும் ,
இன்னும்  எனக்குயிர் இருப்பதை கண்டு
உருகினேன் உன்னை எண்ணி .. ..
வண்டி கட்டி வரிசையாய் அடுக்கி வைத்த என்னில்
பிணமாய் உன்னை வளர்த்தி  எரி மூட்டிவிட்டார் .. ..
சுடு காட்டில் நீறாகி
இன்றுதான் இறக்கின்றேன் நானும்
உயிர் தந்தவனே உன்னை வெட்டியது யார் .. .. ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...