dimanche 16 décembre 2018

ஓர விழி ஓவியம் சிரிக்கிரது !!

உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
நாயகன் நாயகி நீயே
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்
ஓவியம் சிரிக்கிறது

வாழ் நாள் இருப்பில் வாசனை உன்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை
எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்

வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்

உன்னை சுற்றி சிலந்தி வலை
சித்திரக் கோடுகளாய்
காணும் வரைதான் கனவுலகம்
நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும்
நீரில் நீந்தும் காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு எதற்கு
சாமிக்கும் சொல்லிவிடு
அனைத்தும் இங்கே நிர்வாணங்களே

பாவலர் வல்வை சுயேன்

lundi 10 décembre 2018

ஏட்டுச் சுவடி..

ஏட்டுச் சுவடிகளை விண்ணளாவி விழி திறந்தது கணணி
உயிர் எழுத்துக்களோடு உயிர் மெய் எழுத்துகளை
உறவில் வைத்தேன்
கிளவியர் யாடை புனைந்து தொடு என்றது தன்னை

கட்டுண்ட பஞ்சு விரல்கள் முத்தமிட்டு
மொழிக் காதலுற
மெமோறி அனுக்கள் மின் அலைகளில்
தன் காதலை சொல்லியது
என் காட் டிஸ்கில் இடம் இல்லை
அன்னை தந்தையின் காதல் கடன்
இன்னும் தீர்க்கப்படவில்லை
எப்படி இதயம் கொடுப்பேன்
என்னொருத்தியிடம் (என்னொருத்தனிடம்)

காசிருந்தால் வாங்கலாம் கனதி ஏற்றும் காட் டிஸ்க்
வாங்கிய பின் தருகிறேன் என்னிதயம்
உன் விழி ஒளி மிகு எக்கிறோணில்
வான வில்லின் வர்ணங்கள் தூவி
உன் முகத்தில் என் முகம் பதித்து
பிறிண்டர் எடுப்போம்
பிரதிப் பைலில் சேர்ப்போம்
அதுவரை பொறு மனமே
எதையும் தாங்கும் பூமி எம்மையும் தாங்கும்

பாவலர் வல்வை சுயேன்

mardi 4 décembre 2018

அகவை காணும் அன்பு பாவலா வாழ்க நீ !!!


தமிழீழ தேசத்தின் ஆஸ்தான பாவலனே
விடிந்தும் விடியாத விடை இல்லா வாழ்வில்
மூழ்கி தவிக்கிறோம்

இருந்தும் இல்லாதாரும்
இல்லாது இருப்போரும்
அள்ளும் துயர் அலையில்
அனுதினமும்
வாழ்வாண வாழ்வு
வாழ்வோம் என்று
தேடும் விழிகளின் தேக்க நீர்
வற்றா ஜீவனொடு வறுமையில்

வழிமேல் விழி நோக்கி
பொறுமை சிலையாய்
பூகம்ப மலையாய்
அமைதி கடலில் மூழ்கி கிடக்கிறோம்

வா வா புலவா புதுவை இரத்தினமே
இன்றுன் பிறந்தநாள் காண்போம் இனிதாக
வா வா புலவா
ஆஸ்தான புலவா புதுவை இரத்தினதுரையே
வாழ்க தமிழ் வாழ்க வீரம்
வாழ்க நின் தமிழீழ பாக்கள்
வாழ்த்துகிறோம் வாழிய புலவா
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீ
எமதீழ அரசின் அவை புலவனே
என்றும் பதினாறே உனக்கு

03.12.2018
அன்புடன் - பாவலர் வல்வை சுயேன்

மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விண் பூத்த ஒளியும் விடிவில்லா வாழ்வும்
காணாக் கண்கள் பனித் தொழுக       
அன்றாடம் வாசலிலே
அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்தார்
மண் மீட்பு போரிலே மாவீரர்கள்

எள்ளி நகை கொண்டே கொள்ளி இட்ட கொடும் பகையே
ஆண்ட இனம், மானம் இழந்து மண்டியிட்டு மாழுமோ
தன் தேசம் இழந்து தாழ் பணிந்து வீழுமோ
தமிழீழம் தலை சுமந்தான் மாவீரன் பிரபாகரன்
அவன் வழி நடந்து களம் காத்த
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விடுதலைத் தீ வேழ்வியிலே
விடிந்த ஈழம் நீ அறிவாயடா
விடுதலைக்கு கொடுத்த விலை
எம துயிரே விலை ஏதடா
தமிழ் பாலூட்டி வளர்த்தாள் தமிழீழத் தாயல்லவா
தன்மானச் சேலை கொடுத்தார் மாவீரர் இவரல்லவா

முன் ஆன்ட எம் அரசின் முடி வாழ் கண் சுமந்த புலி
இந் நாள் தனிலும் இலங்காபுரி ஈன்ற கொடி
கோட்டை கொத்தளம் வென்று அரசுரிமை ஆட்சி தந்து
வடக்கும் கிழக்கும் ஒருமையின் உயிர்க் கூடென்றார்

தாயகக் கனவை தினம் நினைந் தெழு மனமே
வஞ்சக வலை அறுத்து வாழ்வியல் வளம் தேடு
உன் தாய்த் திரு நாடு தமிழீழமே
வாகை சூடிடல்லாம் வென்றெழு தினமே
சுய உரிமை சுதந்திரம் இல்லையேல்
இறந்தவர் நீரே

மண் மீட்பு போரிலே தமிழீழம் மலருமடா
அன்றாடம் வாசலிலே அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்து அரசுரிமை தந்தார் மாவீரரே

பாவலர் வல்வை சுயேன்

samedi 10 novembre 2018

பச்சை மடல் தோப்பு !!!


கொடிச் சோலை கடை விரித்தாள்
நுகர் கொம்புக் கூந்தல் காறி
வாங்கிச் சென்றன பட்டாம் பூச்சிகள்
வண்ண மலர்களை அவள் வாசலுக்கு

பாலருவி நூல் இளையாள்
வெட்கத்தில் தலை குனிந்து
ஊருக்குள்ளே ஊர் கோலமிட
பச்சை மடல் தோப்பிலே
அக்கக்கோ எனும் குயிலின் கீதம்
பூங்குயிலே பூம் பாவாய்
கால் கடுக்க காத்திருக்கேன்
பூமித் தாய் புலர்வு கொய்ய
பள்ளி கொள்வோம்
பார்க்கும் விழி ஏதடி
பஞ்சணையும் தேவை இல்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 2 novembre 2018

ஒளியின் துளியில் தாயகம்!!!

அதிகாலை புலர்வின் சூரியக் கதிர்கள்
மெல்லென எழுந்து
கூரை ஓட்டின் சாளரங்கள் ஊடே நுழைந்து
மூடித்திறந்த விழிகளுக்கு காலை வணக்கம் தந்தன

துயில் தந்த பாய் சுருட்டி ஓரம் வைத்துவிட்டு
காலை கடன்களை முடித்து
தலை வாசலில் வந்தமர்ந்தேன்
கதிரவன் வரவு கண்ட தென்னங் கீற்றுக்களும்
சென்டு பூக்களை ஜனனிக்கும் பூச்செடிகளும்
உள்ளம் மிகை பொங்க நர்த்தனங்களாடி

வாசல் வந்த கதிரவனுக்கு வாசனை தூவி
பூமித் தாய்க்கு பச்சை சேலை கட்டி
பல வர்ண யருகைகள் நெய்து
உள்ளப் பூரிகையுடன்
உறவுப் பாசம் ஊட்டி என்னை பார்த்தன
காலை எழுந்து என்ன செய்தேன் நான்
என்னைத் தாங்கும் தாய் நிலத்திற்கு

வெட்கித்தேன் வேதனை உற்றேன்
புன்னகை உலர்ந்த தாய் நிலத்தின்
கண்ணகை காணாது கலங்கினேன்
தேடலின் வாசல்கள் திறந்திருந்தும்
தனயன் என் பணி மறந்திருந்தேன்
உத்தரவுக்கு காத்திருக்கவில்லை
என் பாதங்கள்
மெல்ல நகரும் பாதம் கண்டு
உள்ளம் மிகை கொண்டு
விடிவைத் தரும் கதிரவனின்
ஒளி பற்றி செல்கிறேன்
நாளைய விடியலில்
நம் தேசம் புன்னகை பூக்கட்டும்

பாவலர் வல்வை சுயேன்

தண்ணீருக்கும் தாகம் !!!

வான தேவனே வந்துவிட்டாயா
என் காதல் கடிதங்களை
மேகக் கூட்டங்களிடம்
தூதனுப்பியிருந்தேன்
நீ கண்டுகொள்ளவே இல்லை

தூரத்து வானம் உன்னை
தொட்டேன் என்று
கண்டவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை இன்னும் நான்
கன்னியாகவே இருக்கிறேன் என்று
உனக்கும் எனக்கும்தான் தெரியும்

தண்ணீராய் நீ பிறந்தும்
உன் தாகம் தணியலையே இன்னும்

பாவலர் வல்வை சுஜேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...