mercredi 17 juin 2020

ஆண்டவன் தரிசனம் எதற்காக !!!

விண்ணைத் தொடுவது இனியது
மண்ணின் காதல் வலியது
என்னுயிர் இன்றி போனாலும்
தமிழினம் வாழ
தனி நாடு
இப்புவிதனிலே இல்லை என்றால்
உன்னை நினைந்தேன் இன்னும் வழிபாடு

ஆலய மணிகள் எதற்காக
ஆண்டவன் தரிசனம் எதற்காக

மதங்களாலே மதங்கள் ஏறி
இனச்சுத்தி வதையில்
உயிர்களை கொய்கின்றார்
அடியவர் இல்லா இடந்தனிலே
இறைவா கோயில் நிலைக்காது

நின் நிழல் திருவடி நின்றாறி
தமிழினம் வாழ வாழ்வு கொடு
கோன் உயர் கொடி உயர்ந்திங்கு
குலம் தழைப்போம் குலச் சாமி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...