vendredi 19 juin 2020

காவியமா ஓவியமா !!!


தண்ணீர் தண்ணீர் என்று
தாக நிலை பெருக்கெடுத்து
ஜீவன் துடி துடிக்க
தன்னிலை தாண்டா
நூல் வேலிக்குள் நின்று
தந்தையை மகனாக்கி
தாயான மகளே பணிந்தேன்

ஆகாரமோ நீராகாரமோ
கடுகளவேனும் இன்றி
சிறை வதையில்
வீழ்ந்துயிர் போகவே
தண்ணீருக்கும் தடை விதித்தோர்
தம் நிலை இழந்து கூன் னுருக
ஆனந்தக் கண்ணீர் சிந்தின
சிறைக் கம்பிகள்

புரட்சியாளனின் எழுச்சி மகளே
புடம் போட்ட தங்கமே
ஆடக்கு முறையாளரும்
கரைத்திட முடியாத
காவிய ஓவியம் நீ

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...