jeudi 18 juin 2020

கொரோனா கோழி !!!


 கூவுது கூவுது சேவல் கூவுது
கொரோனா கோழி கொக்கரித்தே கூடுது
முகம் அறியா முகநூல் அரங்கே
முழுதும் நனையுதப்பா
தடம் அறியா புயலும் வீழ்ந்து
சாமிக்கும் சேதம் அப்பா

வேரடி மண்ணுக்கு நீர் ஊற்று
வேண்டாம் விழலுக்கு கூப்பாடு
முந்தானை இல்லா முயல் முகத்தில்
வழிந்தே ஏங்கிது வலைக் கூடு

கொரோனா கோழியே குங்கும உதட்டில்
கொல்லாமை தவிர்ப் பேது
இதில் இல்லாமை நிலை ஏது
மானே வா.... மயிலே வா…..
மானத்தை இழந்து வீதியில் நிற்றல்
யாருக்கும் உதவாது

கண்ணே மாறியதேன் வேழமும் வீழுதிங்கே
இழை நூல் வேலியும் இடை அகற்றி
காசுக்காக உன்னை இழக்கின்றாய்
மானச் சேலை மறந்தே போச்சோ
அதற்கொரு விலை உரைக்கின்றாய்

அல்லாடும் மனசே நெறி ஊற்றில் நீந்தாயோ
உன்மான உயர்வுக்கு தணல் கூட்டை தணியாயோ
பொன்மானே பெண் மானே போனது போகட்டும்
நல வாழ்வில் நாணமுறு நலிந்தேகும் புயல் காற்று
கற்றோரும் இங்கில்லை கல்லாரும் இங்கில்லை
கரை ஏறா காமத்தில் கண் இருந்தே குருடானார்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...