mardi 28 mai 2019

நாண மகள் !!!


கங்கை நீ கண்ணாடி விம்பமடி
நாணல் எனும் நடை பயின்று
நல் வீணை மீட்டுகிறாய்
விரல் கோதும் மலை வீழ்ந்து
சுரம் ஏழும் எழுதுகிறாய்
மாதெனும் பூமி நாணம் உற்று
ஆடை கட்டுகிறாள் உன்னால் 

கோல விழி வாளினை - விஷ
விழிகள் வீழ்த்தும் என்றால்,
எடு நீயே உனக்கும் ஓர் ஆரத்தி
அது சுடு தீபம் அல்லாமல்
சுடு குழலாய் இருக்கட்டும்
உன் இன்பக் கனவுகளை தனதாக்கி
மலரும் நாளை பெண்ணின விடிவு 

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...