mercredi 20 mars 2019

மாமா வாங்கோ மாமா வாங்கோ


மாமா வாங்கோ மாமா வாங்கோ
                        மழலை பூக்கள் அழைக்கின்றோம்
செஞ்சோலை நிழல் தந்த மாமா வாங்கோ
இரத்த ஆற்றில் தினம் மிதக்கின்றோம்

கண்ணை பறிச்சு காட்டில் விட்டு 
கைத்தடி ஒண்டு தாறாங்க
கைத்தட்டு ஏந்தி பிச்சை கேட்க
வீதியில் எங்களை விட்டாங்க

பாரத வரவு பெளர்ணமி என்றே
அப்பா அன்று சொன்னாரு
எங்களை விழுங்கும் சுனாமி என்றே
தலைவர் மாமா நீங்க சொன்னீங்க
காதகர் வந்தார் காமுக கழுகாய்
அம்மா கூட இரையாணாள்
சிங்கள ராணுவ கொடும்வதை முகாமில்
அப்பா கூட பிணமானார்

கருநிலா காலம் கண் உறங்கி நாளாச்சு மாமா
சாகாமல் சாகிறோம் சவக்காட்டில் வீழ்கிறோம் 
காத்திட ஓடி வாங்கோ 
மழலை பூக்கள் வாடுகிறோம்
உங்கள் மதி முகம் காட்டி போங்கோ

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...