இனப் புயல் இங்கே வனப் புயலா தமிழா - தினப்
புயலாலே இன்னும் நீ அடிநிலைதானா
சுதந்திர வாழ்வை சுறண்டலில் துலைத்து சிறையில் ஏனடா
கேழ்விக் குறியாய் வளைந்த வாழ்விற்கு நீதி தேடடா தமிழா
பூவரசம் வேலிக்குள் புலுணிக் குஞ்சும்
புலி ஜென்மம் எடுக்கலையா
உலக வானில் புலிக்கொடி உயர்ந்து
மான மறவரின் மரபு உயரலையா
அகரம் எழுதி அறிவைச் சேர்த்த
அழகு ஈழமடா
கனிந்த பழம்தான் தமிழீழம்
கையில் கிடைக்கும் எக் காலம்
மசக்கையிலே நீ மாற்றான் கால் நிலை
உலைக் களத்தாலே உருகி ஓடுதே
உன் உறவின் ரெத்தமடா
சமர்க்களம் ஆடிய வேங்கைகளாலே மலர்ந்தது
தமிழீழம்
வஞ்சனைக் கொடியோர் வாரி இறைக்க கொடும் தீ கருகி கண்ணீரில் முற்றம்
சந்ததி வாழ சரித்திரம் படைப்போம்
நாளை விடியும் நம் தேசம்
உலகப் பந்திலே தமிழனின் காலம்
வாடா தம்பி வாடா
இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாகமடா
பாவலர் வல்வை சுயேன்
2012ல், எழுதிய பாடல்
2012ல், எழுதிய பாடல்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...