மார்கழி துகிலே உன்னை
விரகம் கொள்ளா விழி பருகி
வியப்புற்றேன்
துகிலாடை அவிழ்க்கும்
துச்சாதணன் அல்லேன்
பனி தூங்கும் பசும் புல்லில்
திறக்காத கதவில்லை
கறுப்பு வெள்ளை ஓவியமே
விருப்போ வெறுப்போ
உன் நெருப்பு முகம் அறியேன்
இரும்பறை இதயத்துள் பூந்துகிலும் தடையோ
துருப்பிடித்த பூட்டென தொடு நிலை அற்றதேன்
திறவுகோல் எங்கே வைத்தாய் சொல் கிளியே
பாவலர் வல்வை சுயேன்
விரகம் கொள்ளா விழி பருகி
வியப்புற்றேன்
துகிலாடை அவிழ்க்கும்
துச்சாதணன் அல்லேன்
பனி தூங்கும் பசும் புல்லில்
திறக்காத கதவில்லை
கறுப்பு வெள்ளை ஓவியமே
விருப்போ வெறுப்போ
உன் நெருப்பு முகம் அறியேன்
இரும்பறை இதயத்துள் பூந்துகிலும் தடையோ
துருப்பிடித்த பூட்டென தொடு நிலை அற்றதேன்
திறவுகோல் எங்கே வைத்தாய் சொல் கிளியே
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...