lundi 15 janvier 2018

எங்க ஊரில் சங்கத் தமிழ்...

சங்கத் தமிழ் எங்கே இல்லை சொல்லு பாக்கியம்
அட அது எங்க ஊரில் பொங்கி வழியிதே
அள்ளிப் பருகேன் பெரும் பேரானந்தம்...
வா வா மடியில் ஆடு ஊஞ்சல்
ஆனந்த வரவிருக்கு
அன்பே என் ஆயிரம் கனவுக்குள்
அழகி உனக்கே அரியணை காத்திருக்கு
     
மெட்டுக் கட்டி தொட்டில் லாட்ட கட்டில் காத்திருக்கு
நிலாவும் வளர்ந்து பௌர்ணமியாக கதிரவன் ஒளி இருக்கு
மஞ்சள் குழித்த மாலை பொழுதை அந்தி தந்திடிச்சே
ஆதவன் ஒழிகிறான் அந்தப் புறம்
அன்பே வாயேன்டி
கூடி வாழ திரவியம் தேடு அலை கடல் அழைக்கிறது     
அந்தி குழித்தவன் அழிவதில்லை திரை கடலேறி
அள்ளி வாடா திரவியம் ஆனந்த வாழ்விருக்கு

ஊரே கூடி வாழவும் உறவை கூட்டி மகிழவும்
உழைக்கும் கரங்களில் வலுவிருக்கு
எந்தை உந்தன் முன்னோரும்
அப்பன் ஆத்தா பாட்டனும்
வாழந்து தந்த நிலம் இது
வாழ்ந்து கொடுப்போம் வல்லவர் கையில் வல்வை
பணமும் குணமும் பிரிவினை இல்லா பரிந்துரை செய்தே
ஒளி நிலா கூட்டி விழி உலா போவோம் வாடா வாயேன்டி


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...