vendredi 30 juin 2017

பீனிக்ச் பறவையே உன் பள்ளி வருகிறேன்....

மலரென நினைத்தேன் அணிகலன் செய்தேன் - என்
மனசை கொன்றே போனதேன் மணிப் புறா
காலச் சூழல் கொய்த தென்று
வேடம் தாங்கல் சென்றதில்லை
கூடு கட்டி வாழ்ந்த மனசை
கொத்திப் போனதேன் வந்த புறா           

பீனிக்ச் பறவையே உன் பள்ளி வருகிறேன்
பால் வேறு நீர் வேறாய் பாகம் பிரித்து
நானும் பழகி பார்த்திட
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போகுமே
கலங்காது வானம் கண்ணீர் இல்லா கோலமே
ஆறாக் காயம் எத்தனை நாள்
ஆறும் அது ஆறே நாள்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கல் வேதனை வாழ்வே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...