mardi 20 juin 2017

நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே !!!

துள்ளித் துள்ளி நிதம் தாவி வரும் வெள்ளி அலையே
உன் புன்னகை பூச் சொரிவில் கனிவுறு மனம் கண்டேன்
ஊருக்குள் உத்தமரை நிதம் தேடி நீ வருகிறாய்
நூல் வேலி தாண்டித் தாண்டி
நுகர் கொம்பு ஊன்றி ஊன்றி
நகம் பதிக்கும் கூட்டம் தானே இங்கே இங்கே

தவம் இருந்த நாட்கள் எண்ணி தாண்டும் நிலை தாண்டிவிட்டால்
ஆணோ பெண்ணோ தொடாத பாகங்கள் ஏதும் இல்லை
தொட்டணைத்தே வாழுகிறார் தொட்டும் குறை விட்டதில்லை
பகலிலே அருந்ததி நோக்கும் பெருந்தகையே எல்லோரும்
பொய் முகங்கள் போடும் கோலம் கை விலங்கும் காணாத் தூரம்
பூகம்பச் சாரல் வீழ்ந்து புறையோடி போன பின்னும்
நீ அள்ளி வருகிறாய் வெள்ளி அலை
இங்கு நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே.....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...