lundi 12 juin 2017

இறப்புக்கு பின்னால் ஏதும் இல்லை...

வாழும் போதே நன்றே வாழ்ந்திடு   
நாளை இங்கே யார்தான் இருப்பார்
யாருக்கும் தெரியாதே....

இறப்புக்குப் பின்னால் ஏதும் இல்லை
இருக்கும் நீதான் அறிவாயே....

வறுமையும் வாழ்வும் சிறுமையும் பெருமையும்
வந்தே போகும் விதி எனச் சொல்வாரே
வென்றால் தானே வெள்ளிக் கிண்ணம்
சாதனை தானே வேதனை போக்கும்
உணர்ந்தே வென்றுடு நாளையும் உனதாகும்

நீதியும் நேர்மையும் நெறி கெட்டே வீழ்த்தும்
நதியென நீயும் வளைந்தே ஓடு
வாழ்வின் லெட்சியம் இதுதானே
நாளைய தலைவன் நீயும் ஆகலாம்
உன் குடை நிழல் வாழ ஊரே கூடும்
உயிரே அறிவாயே உன்னை நான் அறிவேனே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...