jeudi 9 février 2017

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம் !!!!


விடி வானம் சிவந்து விடியல் பருகி விழி மலர

உதிர்ந்த மரங்களாய் உதிர்ந்தன உயிர்கள் 

கூனி வளைந்து குறுகியது கேழ்வி

பாரா முகமாய் பதில்கள் சிதைந்திட

யுத்தத்தின் மொத்த ரணங்களோடும்

திறந்த வெளிச் சிறையில் எஞ்சிய எச்சங்கள்

கானல் வாழ்க்கை கண்ணீர் குளத்தில்

ஊற்றுத் துளிகள் உறங்கா இருளில்     

விடிவில்லா எச்சமாய் விடிவின்றித் துடிக்கிறது

இன்று கேபாப் புலம் நாளை எவ்விடமோ

மடிந்தோம் என்று மனம் குன்றாதே

விடிவுண்டு நிச்சயம் எழுந்து போராடு

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம்       



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...