இன்று சிரியுங்கள் நாளைய பொழுதில்
நாலும் நடக்கலாம் !
நாளை உதிர்வேன் என அறிந்தும்
மலர்கள் சிரிக்கலையா
உதிரும் இறக்கை என தெரிந்தும்
பட்டாம் பூச்சி பறக்கலையா
இன்ப துன்பங்கள் நிரந்திரம் அல்லவே
இடிந்தது மனசென நினைந்து
இரும்பறையில் இதயத்தை
பூட்டிவிடாதீர்கள் !!
அதோ பஞ்சவர்ணக் கிளிகள் அழைக்கிறன
இமைச் சிறகை விரித்து இருள் அகற்றி
உதயம் காணுங்கள் !!!
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...