mardi 21 juillet 2015

முகம் பார்த்த கண்ணாடி ....

இதயம் ஒரு வைரம் என்றே இத்தனை நாள்
நினைத்திருந்தேன் ....
அது உடைந்ததும் அறிந்தேன்
அதுகும் ஒரு கண்ணாடி என்று
உடைந்த துண்டுகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு சுய சரிதை சொல்லியது எனக்கு

சிரித்தவருக்காய் சிரித்திருக்கிறேன்
அழுதவருக்காய் அழுதிருக்கிறேன்
சுமை கொண்டோர்க்கு
சுமைதாங்கியாய் இருந்திருக்கிறேன்
உறவென்றும் உற்றார் என்றும்
மனைவி என்றும் மக்கள் என்றும்
தோழன் என்றும் தோழி என்றும்
அனைவருமே முகம் பார்த்த கண்ணாடி
என் இதயம் ....

உடைந்த துண்டுகளை ஒட்டி பார்த்தேன்
ஒட்ட முடியவில்லை
என் இதயக் கண்ணாடியில் ஒவ்வொருவருமே
கல் எறிந்திருக்கிறார்கள்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது இதுதாண்டா உலகம்
போதும் உனக்கு வா என்றழைக்கிறது...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...