vendredi 10 juillet 2015

முத்தக் கணக்கை வையாதே ...


பருவக் கோலம் பற்றி எரிகிறேன்
வாலிப முறுக் கென்னை
கெஞ்சுதடி கொஞ்சுதடி
கொஞ்சமேனும் கொஞ்சலாமே
விஞ்சேன் அஞ்சாதே
தணித்திடு ஏஞ்சலே என் தாகம் நீதானே..
 
நித்தம் தருவேன் மொத்தம் அறியேன்
ஆசை கொண்ட பித்தன்
அவனியில் எவனில்லை
மன்மத பாணம் தைத்திட வீழ்ந்தேன்
முத்தக் கணக்கை வையாதே
கொடுக்கவா எடுக்கவா
இருட்டறை கூடு இன்ப சுரம் மீட்டுதடி
பூட்டிய கதவுக்குள் நீயும் நானும்தான்
சம்சாரம் இல்லா சன்னியாசியும்
விதி விலக்கல்லடி ...
Kavignar Valvai Suyen

6 commentaires:

  1. முத்தக் கணக்கை வையாதே
    கொடுக்கவா எடுக்கவா ...AAha!....

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி வேதாக்கா... இது சொத்துக் குவிப்பல்ல அன்றாட வரவு செலவில் முத்தக் கணக்கும் ஒன்றே (வையாதே) ஏசிவிடாதே கொடுத்து வாங்குவதில் கடனாளி யாரும் இல்லை என்கிறான் அவளின் நாயகன் - மகிழ்ச்சி

      Supprimer
  2. மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. திண்டுக்கல் தனபாலன், நட்பே நீ தந்தாய் நான்கெழுத்து நான் தந்தேன் மூன்றெழுத்து நன்றி....

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்து மகிழ்ந்தேன் ஐயா... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. தம்பி ரூபனுக்கு என் மன மகிழ்ச்சி தந்தேன் ரசனை மிக்கவன் படைப்பாளியே உன் படைப்புகளை நானும் அறிந்து மகிழ்ந்தேன் - நன்றி

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...