lundi 11 août 2014

முதல் ராத்திரி நான் இவனுக்கு முழு நிலா ..

 
 
முதல் ராத்திரி நான் இவனுக்கு முழு நிலா
மூன்றை பெத்தபின் ஏனோ கரு நிலா
என், ஸ்பரிசங்களில் பூத்த வியர்வைத் துளிகள்
அன்றுவனுக்கு பன்னீர் வாசம் ..
இன்றோ என் வியர்வைத் துளிகள்
இவனுக்கு துர் நாத்தம் ..
என் நாடித் துடிப்பின் ஓசை ஒன்றுதான்
எனக்கு வாழ்நாள் கடிகாரம் ஆகிவிட்டது!

நிலா என்றழைத்தவன் உலா போகிறான்
நூலறுந்த பட்டமாய் ஒருநாள்
இவன் தொங்கும் வேளை
காத்தும் மழையும் இவனுக்காக 
காத்திருக்கா தென்பதை அறியட்டும் ..
என்றோ இவன் எனைக் காண வரும்போதில்
வாசலில் நான் அல்ல ,
இவனுக்காக காத்திருக்கும் விளக்குமாறு .. ..
 
 
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...