lundi 5 décembre 2016

கண்ணீர் அஞ்சலி அம்மா...



சாதனை பெண்ணே போய் வா, வீரப் பெண்ணே நீ போய் வா
இருள் சூழ் உலகில் ஒளி விளக்கேற்றி தாய்க்குலம் காத்த தாயே நீ போய் வா
பொல்லா உலகெனக் கண்டும் போகட்டும் எனக்கென்ன என அஞ்சிக் கிடந்தவள் நீ அல்ல
அரசியலென்ன அரசியல் அரசியாய் நாடாண்டு ஆளுமையும் தந்தாய் தாயே நீ போய் வா
இடியென பொழிந்து மாதர் சிந்தும் கண்ணீர் மழைத் தூறல் உனக்காய் வீழ்கிறது மண்ணில்
இரும்புப் பெண்ணே அம்மா நீ போய் வா உன் ஆத்மா சாந்தியுறுக, சாந்தி சாந்தி சாந்தி

பாவலர் வல்வை சுயேன்

காந்தர்வ மணம் ...



உன்னிடம், காதல் பாடம் படிக்க வந்தேன்
உன் விழிகளால் என் விழிகளில்
காந்தர்வம் எழுதிவிட்டாய் !
முடிவுரை காண்பதற்குள்
ஆயுள் முடிந்து விடும் போலிருக்கிறதே
இன்னொரு ஜென்மம்
இன்னும் வேண்டும் இருவருக்கும்
இப்போதே வா இறைவனிடம் கேட்போம்

பாவலர் வல்வை சுயேன்

jeudi 1 décembre 2016

அந்த நாள் முதல் இந்த நாள்வரை!!!






இராத்திரியில் பூத்த நிலவு
சிவராத்திரியானது
கடலோரம் கால் தொட்ட அலைகள்
கணநேரம் கார் இருளை களவாடிப்போனது
அந்த நாள் முதல் இந்த நாள்வரை
இராத்திரிகள் எழுதும் வர்ணனை எண்ணில் இல்லை
அந்த விண்மீன்களுக்கே எண்ணிக்கை தெரியும்
இறைவனும் அறிவானோ இதுவரையில் அறியான் அவனும்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...