நினைவேந்தல் !!!
மண்ணின் விடுதலை மண்ணிலே
புதைந்தது மே, பதினெட்டிலே
விடுதலை வேழ்வியில் யந்துக்கள்
விஷம் கொட்டியதும் மே, பதினெட்டிலே
இனச்சுத்தி கொலையில் இலெட்சம் தமிழர்
முள்ளியில் மூழ்கினர் மே,பதினெட்டிலே
விடுதலைக்கே தலை கொடுத்தோம்
விடுதலை இன்றியே வீழ்ந்தன தலைகள்
முள்ளி வாய்க்கால் முடிவும் அல்ல
முற்றுப்பெற்ற முகவுரையும் அல்ல
அன்னைத் தமிழால் அகம் உருக்கி
இன்னுயிர் உறவுகளை நினைவேந்தி
வணங்குவோம் இந்நாள் மே,18
கொடுநிலை வீழ்த்தி கொள்ளி இட்டோரே
அணையாத் தீ அகிலத்தின் இருப்பு
ஆணை இட்டு அணை இட்டாலும்
அலை என எழுவோம்
அக வணக்கம் செய்வோம்
நீதியின் விழியில் நீரோட்டம்
நிச்சயம் உலகம் செவி சாய்க்கும்
உலக மன்றிலே மனு வைத்தோம்
உரிமைத் தேசம் மீழ் பெறுவோம்
கருணைக் கண்கள் திறக்கிறது
கயவர் படை சிறை சேரட்டும்
தடைகள் உடைய தலை தருவோம்
தன்மான உயர்வுக்கு உயிர் தருவோம்
முள்ளிக் கடலே உரம் ஊட்டு
சுதந்திர தாகம் தணியட்டும்
முட்டும் பகை முடி அறுத்து
முழங்கு சங்கே விண்ணும் அதிர
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...