கொஞ்சிக் கொஞ்சி
கொஞ்சு மொழி பேசும்
பஞ்ச வர்ணக் கிளியா
நீ
சிற்றுடை மேனி
சிற்றாடை உடுத்தி
சொப்பனத்தில் என்னை
இமைச் சிறகால்
மூடுகின்றாய்
காதோரம் லோலாக்கு
வளர் மதியோ அறியேன்
கார் கூந்தல் நீவி
உன் கன்னம் கிள்ளுதடி
அஞ்சுதே மனம்
ஏஞ்சலே
மூடிய விழிகளுக்குள்
என்னை
ஏர் பூட்டி
உழுகின்றாய்
சிறைப் பட்டு
சிதைந்தாலும்
நிறங்கள் பெற்ற வரம்
கரங்கள் பெறத்
துடிக்கிறதே
நீலக் குயிலே
நிறங்களில்
ஒன்றாகவா
நியம் தனில்
ஒன்றாகவா
மௌனத்தில் நீ
இருந்தால்
மரணித்து
போகின்றேன்
காலம் கடந்தாலும்
கை வீசி வா
எமனிடம் மனுத்
தாக்கல் செய்து
உன் மடி சாய
வருவேன் நான்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...