மல்லி மல்லி நீ குண்டு மல்லி நிலவா வெயிலா
மனங்கள் தொடுவதில் உயிர்த்தது தழிரா தமிழா
ஊடலில் நீ வெயிலே வெயிலே
கூடலில் குளிர் நிலவே நிலவே சரிதான் சரிதான்
மின்னல் கொடியே கொடி இடை கனியே
மழையினில் நனைவோம் சுகம்தான் சுகம்தான்
சாத்வீக யுத்தம் சரங்களை தொடுக்கும்
உயிர்தான் உயிர்தான்
சூடிடும் மலரே தேனிசை குயிலே சரியா தவறா
பூத்தது நிலவு பூமிக்கு அழகு
பூவிழி வாசலில் இராத்திரி வரவு
வாழ்வினில் வசந்தம் வருவதும் போவதும்
நியம்தான் நியம்தான்
இரு விழி எழுதும் இலக்கண பிழைகளை
வரைமுறையாலே பிழைகளை திரித்தி
உலகினை காண்போம் உயிரே வா...
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...