mardi 17 juillet 2018

கண்ணை பறிக்கும் மின்னல் !!!



தேசம் எங்கள் பாரதம் என்றே
மூவர்ண கொடி பறக்க
விண்ணை தொடுகிறது முழக்கம் 
சுறண்டும் வர்க்கமே நீ சுறண்டிச் செழிக்க    
ஏழை எழியோர் வடிக்கும் கண்ணீரே
பெய்யும் கனதி மழை போலும்

முழக்க மின்னல்கள் தோன்றி ஒளிர
டியிட்டல் இந்தியா வார்ப்புகளில் தெரிகிறது
வீதி ஓர சுரங்கக் குளாய்களில்
இத் தேச சீமான்களின் வாசம்
கோடை அனலுக்கும் மாரி மழைக்கும்
தமக்கென இருக்கும் உறவுகள் இவரென
சந்தோசம்

தேர்தல் காலம் ஒன்றே நினைவு கொள்கிறது
இவர்களை இந்தியக் குடி மக்களென்று
தேடிச் செல்கிறார் அரசியல் தலமைகளும்
வேட்டி சேலைகள் கொண்டு
குடியுரிமை வாக்குண்டு குடியிருக்க குடிலும் இல்லை
கூலிக்கு ஆள் வேண்டுமாம் கூடவே கூவுகிறார் சிலர் இங்கு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...