mercredi 13 juin 2018

சரணம் ஆனேன் பல்லவி நீயே...


என்னன்பே என்னுயிரே என் செய்தேன் உன்னை
என்னை வென்றாய் எழிற் தமிழாலே
சரணம் ஆனேன் பல்லவி நீயே

வண்ணம் தூவிய வான வில்லைத்தொலைத்தேன்
வைர நட்சத்திரங்களின் உறவைத்தொலைத்தேன்
என்னை உலுக்கிப்போகும் அழகே
எத்தனை நட்சத்திரம் எண்ணில் இல்லை
ஒன்றாய் சேர்த்து சிரு கல்லாக்கி
உன் ஒற்றை கல் மூக்குத்தியில்
ஒளித்தாய் எப்படி

தங்கம் தானே உன் அங்கம்
அள்ளி பருகிதே ஆனந்தக் குளம்
ஆனந்த உலகென நீ இருக்க
ஏழுலகும் தேடி போவேனோ எழிலே 
அன்பே அன்பே கருக்கல் கரையுதடி

செம்மாங்கனியும் செம்பரித்தி இலையும்
எழுதும் ஏடக ஆலிங்க படையலும்
மாயம் அறியேன் காயம் ஆனேன்
அள்ளிப் பருகினேன் அதிரசம் ஆருயிரே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...