mercredi 18 novembre 2015

முள்ளிக் கடலோரம் முருகா ஏன் நீ வரவில்லை .....



சங்கத் தமிழ்த் தலைவா சண்முகா சரவணா தேவர் குறை தீர்த்த முருகா
மழை வந்து கடலாகி வாழ்விடம் முகம் துலைத்திருக்க
சூர சம்காரம் செய்ய எழுந்த வடிவேல் அழகா
நீ ஆடும் களம் கண்டு பொய் மேனி சிலிர்க்குதையா
போர் என்று எமைச் சூழ்ந்து வதை செய்து உயிர் அறுத்த
முள்ளிக் கடலோரம் முருகா ஏன் நீ வரவில்லை
நச்சிளைத்த குண்டு மழையில் நீயும் மூச்சிளந்து போவாய் என்றோ
வள்ளி தெய்வானை அருகிருக்க நடு இருந்து எமை மறந்தாய்
அஞ்ஞான அறிவினிலே அடம் உற்று உளறவில்லை
முப்பாட்டனே முருகா எமை தடுத்தாட் கொள்ள ஏன் மறந்தாய்
மறவோம் மறந்தறியோம் நீ வரம் தரும்வரை
உன் திருப் பாதம் பற்றி பின் தொடர்கின்றோம்
இத் தரணியிலே எமக்கொரு தமிழீழம் வேண்டும்
முத் தமிழ்ச் சங்க முருகா வெற்றி நிச்சயம் காண வேலெடுத்து வா...
Kavignar Valvai Suyen

samedi 14 novembre 2015

எமக்கென்றும் பதினாறே ....



இருள் வானிலே ஓர் பிறை நிலா - கொஞ்சம்
கொஞ்சிக் கொஞ்சிப் பேச எண்ணி
செவ்வானம் கெஞ்சுதடி ...      
நீ இல்லா வானம் இங்கே நிர்மூலம் தானே மானே
நாம் என்ற உறவறுத்து நான் என்று போகாதே பெண்ணே  
ஆனந்த அலை இல்லா வானம் ஒரு வானமோ
நீ இல்லா நிலாக் காலம் விழி காணக் கூடுமோ
ஏற்றத் தாழ்வு ஏனடி கண்ணே எமக்கென்றும் பதினாறே ....
Kavignar Valvai Suyen

jeudi 12 novembre 2015

கற்றுத் தெரிந்துகொள் ....



கற்றுத் தெரிந்துகொள் நீச்சலையும்
கொள்ளா இடமும் கொள்ளும் உன்னிடத்தில்
தன்னம்பிக்கை என்றும் தளராதிருந்தால் ...
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...