என் முற்றத்து வேம்பே - எங்கள்
சுற்றத்தின் ஆத்மீக சுயம்பு நீஉன்னில் பேயாடுது முனி ஆடுது
என்பார்கள்....
உன் கிளையில்
நாம் ஆடும் ஊஞ்சலே நியமானது
நாம் ஆட நீ ஆட எம் பாட்டுக்கு
எசைப் பாட்டு குயிலும் பாட
எந் நாளும் ஆனந்தமே
பகை அறா காக்கையும் குயிலும்
உன் கூட்டில் தானே
ஒற்றுமை பேணும்
உன் பூ வாசம் போதும்
எங்கள் நோய் எல்லாம் தீரும்
உன் காய் எண்ணை போதும்
வயிற்றுப் பூச்சியும் வலியும்
வற்றியே தீரும்
அயல் வீட்டாரும்
வம்பளப்பதில்லை உன்னோடு
நீ விரித்திருக்கும்
பெருங் குடை நிழல் நின்றே
ஆனந்தம் கொள்வார்
வேலி தாண்டி நிற்கிறேன்
ஊரும் இல்லை உறவும் இல்லை
நோயில் பாயில் வீழும் வேளை
உறவென்று சொல்ல நீயும் இல்லை






